2014-04-21 14:52:58

இவ்வாண்டு முதல் கியூபாவில் புனிதவெள்ளி அரசு விடுமுறையாக அறிவிப்பு


ஏப்.21,2014. 2012ம் ஆண்டிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும் சிறப்புப் பரிந்துரைகள் மூலம், புனித வெள்ளியை, தற்காலிக, விருப்ப விடுமுறை நாளாக அறிவித்துவந்த கியூப அரசு, இவ்வாண்டிலிருந்து அதனை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
புனித வெள்ளி அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்கப்படவேண்டும் என, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், கியூப நாட்டிற்கு 2012ம் ஆண்டு மேற்கொண்ட திருப்பயணத்தின்போது விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, வரும் ஜூன் மாதத்திலிருந்து இப்புதிய விதிமுறை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1959ம் ஆண்டு ஃபிதெல் காஸ்த்ரோ அவர்கள், கியூபாவில் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மத வழிபாடுகளும் மதம் தொடர்பான விடுமுறைகளும் தடைச்செய்யப்பட்டன.
1998ம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் கியூபா நாட்டில் திருப்பயணம் மேற்கொண்டபின்னரே, அந்நாட்டில் மத ஊர்வலங்களும், கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட்டங்களும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.