திருத்தந்தையின் ஒப்புதலுடன் புனிதர்பட்ட நிலைக்கான படிகளுக்கென புதிய பரிந்துரைகள்
ஏப்.16,2014. முத்திப்பேறு பெற்ற இருவரின் பரிந்துரைகளால் இடம்பெற்ற புதுமைகள் குறித்த
விவரங்களும், வீரத்துவப்பண்புகளுக்காக இரு இறையடியார்களின் பெயர்களும் இச்செவ்வாய்க்கிழமை
மாலையில் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பிரான்சிஸ்கன்
துறவுச்சபையைச் சேர்ந்த இத்தாலியின் அருளாளர் கசோரியாவைச் சேர்ந்த முத்திப்பேறு பெற்ற
லூதோவிக்கோவின் பரிந்துரையால் இடமெற்ற புதுமை குறித்த விவரமும், புனித பிரான்சிசின் மூன்றாம்
சபையைச் சேர்ந்த இத்தாலியின் முத்திப்பேறு பெற்ற அமாத்தோ ரொங்கோனி அவர்களின் பரிந்துரையால்
இடம்பெற்ற புதுமை குறித்த விவரமும் இச்செவ்வாய்க்கிழமை மாலை திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு,
புனிதர்பட்ட நிலக்கான படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், பிரான்சில் பிறந்து,
இயேசுவின் திரு இருதயச் சபையில் இணைந்து குருவாகி, Papua நாட்டில் பணியாற்றிய பேராயர்
Alano Maria Guynot, மற்றும், ஆஸ்திரியாவில் பிறந்து புனித மீட்பர் சபை குருவான Guglielmo
Janauschek, ஆகிய இரு இறையடியார்களின் பெயர்களும் அவர்களின் வீரத்துவப் பண்புகளுக்காக
திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, புனிதர் பட்ட நிலக்கான படிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டன.