நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதில் பெண்களின் பங்குக்கு ஐ.நா. பாராட்டு
ஏப்.05,2014. உலகை நிலக்கண்ணிவெடிகளற்ற இடமாக மாற்றுவதில் பெண்களுக்கு முக்கிய பங்கு
உள்ளது என்பதை வலியுறுத்திய அதேவேளை, இப்பணியில் மேலும் அதிகமான பெண்களை ஈடுபடுத்துமாறு
ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார். ஏப்ரல் 4, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட
அனைத்துலக நிலக்கண்ணிவெடிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில்
இவ்வாறு தெரிவித்துள்ளார் பான் கி மூன். நிலக்கண்ணிவெடிகளால் தினமும் பத்துப் பேர்
கொல்லப்படுகின்றனர் அல்லது உறுப்புக்களை இழக்கின்றனர் என்று ஐ.நா. கண்ணிவெடிகள் அகற்றும்
அமைப்பு கூறியது.