2014-04-05 16:29:43

இயேசு நம்மிடம் ஒவ்வொரு நாளும் பேசுவதை நற்செய்தியில் கேட்கலாம், திருத்தந்தை பிரான்சிஸ்


ஏப்.05,2014. நற்செய்தியில், இயேசு நம்மிடம் பேசுவதை ஒவ்வொரு நாளும் கேட்கலாம்; ஒரு சிறிய நற்செய்திப் பிரதியை நாம் எப்பொழுதும் நம்முடன் எடுத்துச்செல்வோம் என்று, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இத்தாலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இரு மேய்ப்புப்பணித் திருப்பயணங்கள் குறித்து திருப்பீடம் இச்சனிக்கிழமையன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தாலியின் கலாபிரியா மாநிலத்தின் Cassano all’Jonio மறைமாவட்டத்துக்கு வருகிற ஜூன் 21ம் தேதி சனிக்கிழமையன்றும், மொலிசே மாநிலத்தின் Campobasso e di Isernia மறைமாவட்டத்துக்கு வருகிற ஜூலை 05ம் தேதி சனிக்கிழமையன்றும் திருப்பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.