Chile நாட்டின் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் அனுதாபத்
தந்தி
ஏப்.03,2014. ஏப்ரல் 1, இச்செவ்வாய் நள்ளிரவையொட்டி Chile நாட்டின் Iquique பகுதியில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தோருக்கு தன் செபங்களையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்
அனுதாபங்கள் கலந்த செபங்களையும் தெரிவித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தியொன்றை
அனுப்பியுள்ளார். Chile நாட்டின் சந்தியாகோ உயர்மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால்
Ricardo Ezzati அவர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள இத்தந்திச் செய்தியில், இந்த
இக்கட்டான நேரத்தில் பணிகள் ஆற்றும் பலரையும் தான் அசீர்வதிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும்,
2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியன்று, இத்தாலியின் L'Aquila எனுமிடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்
5ம் ஆண்டு நெருங்கிவருவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் புதன் பொது மறையுரையின்
இறுதியில் அப்பகுதி மக்களை சிறப்பாக நினைவுகூர்ந்து செபித்தார்.