பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுங்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
ஏப்.01,2014. அன்புப் பெற்றோரே, உங்கள் குழந்தைகளுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுங்கள்,
அவர்களோடு சேர்ந்து செபியுங்கள் என்று தனது இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு துறைகளின் தலைவர்களுடன்,
அப்போஸ்தலிக்க மாளிகையின் பொலோஞ்ஞா அறையில் இச்செவ்வாய் காலை 9.30 மணி முதல் பகல் 12
மணிவரை கூட்டம் நடத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருப்பீடத் தலைமையகத்தின் பல்வேறு
துறைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் Evangelii Gaudium என்ற திருத்தூது அறிவுரைகளைச்
சிந்தித்ததன் பலனாக கிடைத்த கருத்துக்களும், அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில்
பேசப்பட்டன.