2014-04-01 16:20:08

உலக அளவில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து ஐ.நா. விசாரணை


ஏப்.01,2014. வீட்டு வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் நச்சரிப்பு, கட்டாய இளவயது திருமணங்கள் உட்பட உலக அளவில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்த விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார் ஐ.நா. வல்லுனர் ஒருவர்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அறிக்கை தயாரிப்பதற்காக ஐ.நா.வால் குறிக்கப்பட்டுள்ள சிறப்புப் பிரதிநிதி ரஷிதா மஞ்சு இரு வாரங்கள் நடத்தவிருக்கும் இந்த விசாரணைகளை முதலில் பிரிட்டனில் தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஞ்சு, இந்தப் பணியில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைச் சந்தித்து விபரங்களைச் சேகரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.