இந்தியத் தேர்தலுக்கு முன்னர், செபம் மற்றும் உண்ணா நோன்பு, கர்தினால் கிரேசியஸ்
ஏப்.01,2014. நல்ல நிர்வாகம் செய்பவர்களையும், ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டுள்ளவர்கள்
மீது நீதியோடும் பரிவோடும் அக்கறை காட்டுபவர்களையும் இந்திய நாடு தேர்ந்தெடுக்க வேண்டும்
என்பதற்காக, செபம் மற்றும் உண்ணா நோன்பு நாள் ஒன்றை அறிவித்துள்ளார் மும்பை பேராயர் கர்தினால்
ஆஸ்வால்டு கிரேசியஸ். இந்தியாவில் முதல் கட்டத் தேர்தல் இம்மாதம் 7ம் தேதி தொடங்கவுள்ளவேளை,
நாட்டின் தேர்தல்கள் நல்ல முறையில் நடந்து, சனநாயகத்தைக் காக்கும் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச்
செபிக்குமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் இந்தியர்களைக் கேட்டுள்ளார். இம்மாதம் 4ம்
தேதி வருகிற வெள்ளிக்கிழமையன்று, செபம் மற்றும் உண்ணா நோன்பைக் கடைப்பிடித்து நாட்டுக்காகச்
செபிக்குமாறு கேட்டுள்ளார் கர்தினால் கிரேசியஸ். இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சாவால்களைச்
சந்திப்பதற்காக 81 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வருகிற பொதுத் தேர்தல்களில்
ஓட்டளிக்கவுள்ளனர்.