ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் உடனடியாகத் தேவை, கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
ஒருவர்
ஏப்.01,2014. ஆப்ரிக்கக் கண்டத்தில் மனித உரிமைகளைக் கடுமையாய் மீறும் அரசியல் மற்றும்
இராணுவத் தலைவர்களை விசாரிப்பதற்கு ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்படுவது
அவசியம் என, அக்கண்டத்தின் காங்கோ கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Toussaint
Kwambamba கருத்து தெரிவித்தார். ஆப்ரிக்கா குறித்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின்
கருத்துக்கள் குறித்து பேசிய பேராசிரியர் Kwambamba, ஆப்ரிக்கக் குற்றவியல் நீதிமன்றம்
இல்லாத குறையை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தீர்த்து வைக்கின்றது, இதுவே ஆப்ரிக்கர்களின்
ஒரே ஆறுதலாக இருக்கின்றது என்று தெரிவித்தார். தற்போது பதவியில் இருக்கும் சில ஆப்ரிக்கத்
தலைவர்கள் குறித்து அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் குறை கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப்
பேசிய Kwambamba, நெதர்லாண்டின் ஹாக்கிலுள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், ஆப்ரிக்கத்
தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் சில பிரச்சனைகளைச் சந்திக்கின்றது என்றும்
கூறினார்.