பொது மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு NUCF வேண்டுகோள்
மார்ச்,29,2014. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித் கிறிஸ்தவர்களின் உரிமைகள்
உட்பட பொது மக்களின் நல்வாழ்வில் அக்கறை காட்டும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்குமாறு இந்திய
தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்
கழகத்திலுள்ள அனைத்து சபைகளும், தங்களின் தொகுதிகளிலுள்ள வேட்பாளர்களுடன் கூட்டம் நடத்தி
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துமாறும் இக்கழகம் கேட்டுள்ளது. சில மாநிலங்களில் அமலில்
இருக்கும் மனமாற்றத் தடைச்சட்டங்கள், சிறுபான்மைச் சமூகங்களை, குறிப்பாக, கிறிஸ்தவர்களைத்
துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன என்றுரைத்துள்ள அக்கழகம், நாட்டில் சமய சுதந்திரம்
காக்கப்பட வேண்டுமெனக் கேட்டுள்ளது. NUCF என்ற இந்திய தேசிய கிறிஸ்தவ ஒன்றிப்புக்
கழகம், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை, இநதிய தேசிய கிறிஸ்தவ சபைகளின் அவை, இந்திய இவாஞ்சலிக்கல்
தோழமை சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும்.