2014-03-28 16:36:23

ஒளிவு மறைவில்லாத மக்கள்தொகை கணக்கெடுப்பு அமைதிக்குச் சிறந்ததொரு வாய்ப்பு, யாங்கூன் பேராயர்


மார்ச்,28,2014. நீண்ட காலம் துன்பங்களை அனுபவித்துள்ள மியான்மாரில் இடம்பெறவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்கு பெரும் வாய்ப்பாக உள்ளது என்று யாங்கூன் பேராயர் சார்லஸ் போ அவர்கள் கூறியுள்ளார்.
மியான்மாரில் கடந்த முப்பது ஆண்டுகளில் முதன்முறையாக நடக்கவிருக்கும் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பற்றிக் கருத்து தெரிவித்த பேராயர் போ அவர்கள், அரசின் இவ்வறிவிப்பு, இனக்குழுக்கள், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் உட்பட நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், ஒளிவு மறைவின்றி நேர்மையாக இது எடுக்கப்பட்டால், அந்நாட்டில் அமைதி ஏற்படுவதற்குச் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் எனக் கூறியுள்ளார்.
இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, மியான்மாரில் அமைதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களைச் சிறப்பாகத் திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள யாங்கூன் பேராயர், இக்கணக்கெடுப்பு அனைத்துலகப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் ஒளிவு மறைவின்றி இடம்பெற வேண்டுமெனக் கேட்டுள்ளார்.
மியான்மாரில் 135க்கும் அதிகமான இனக் குழுக்கள் உள்ளன.







All the contents on this site are copyrighted ©.