2014-03-27 16:54:00

ஆர்க்டிக் துருவத்தில் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்


மார்ச்,27,2014. 20 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு, முற்றிலும் பனியால் நிறைந்திருப்பது ஒரு பிரம்மாண்டமான காட்சிதான் என்றாலும், இங்கு உருகிச் செல்லும் பனியின் அளவு கவலையை உருவாக்குகிறது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.
புவி வெப்பமடைவதால் உருகிவரும் பனிப்பாறைகளை, கிரீன்லாந்துக்குச் சென்று இப்புதனன்று நேரடியாகப் பார்வையிட்ட பான் கி மூன் அவர்கள், செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
ஆர்க்டிக் துருவத்தில் அமைந்துள்ள Uummannaq என்ற ஊருக்கு, பனியில் சறுக்கிச் செல்லும் வண்டியில் சென்றடைந்த பான் கி மூன் அவர்கள், அங்குள்ள ஒரு கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செப வழிபாட்டில் கலந்துகொண்டார்.
சுற்றுச்சூழல் மாற்றம் குறித்து செப்டம்பர் 23ம் தேதி துவங்கவிருக்கும் அகில உலக உச்சி மாநாட்டிற்கு ஒரு தயாரிப்பாக, ஐ.நா. பொதுச் செயலரின் இப்பயணம் அமைந்ததென்று ஐ.நா. அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.