2014-03-25 15:39:47

நாம் வெதுவெதுப்பான சீடர்களாக இருக்கக் கூடாது, திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,25,2014. நாம் வெதுவெதுப்பான சீடர்களாக இருக்கக் கூடாது. உண்மைக்குச் சாட்சி சொல்லுவதற்கு நமது துணிச்சல் திருஅவைக்குத் தேவைப்படுகின்றது என்று தனது இச்செவ்வாய் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், உறுதியான குடும்ப மதிப்பீடுகளை ஊக்குவிப்பதும், சமூக மற்றும் பொருளாதார உதவிகளைக் குடும்பங்களுக்குச் செய்வதும் குடும்ப வன்முறையைக் குறைப்பதற்கு தேவைப்படுகின்றன என்ற பேராயர் தொமாசி அவர்களின் கூற்றை, திருப்பீடச் செயலகம், @terzaloggia என்ற தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.
மேலும், வருகிற ஏப்ரல் 18ம் தேதி புனித வெள்ளி இரவில் உரோம் கொலேசேயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடக்கும் சிலுவைப்பாதை பக்தி முயற்சிகளுக்கான தியானச் சிந்தனைகளை, இத்தாலியின் Campobasso-Boiano பேராயர் Giancarlo Maria Bregantini, C.S.S., அவர்கள் தயாரிக்கவுள்ளார் என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் இச்செவ்வாயன்று அறிவித்தது.
இன்னும், வருகிற வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா அவர்களையும், வருகிற வெள்ளிக்கிழமையன்று கிரீஸ் நாட்டு அரசுத்தலைவர் Karolos Papoulias அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.