திருத்தந்தை பிரான்சிஸ் : துயர் துடைக்கும் பணியாளர்களுக்கு, இயேசுவின் பாடுகள் சிறந்ததொரு
பள்ளிக்கூடம்
மார்ச்,24,2014. துன்புறுவோர் எவரும் தனியாக இல்லை, மனிதர்மீது இரக்கம் நிறைந்த அன்பு
கொள்ளும் இறைவன், அவர்கள் அருகில் இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு, துன்புறுவோருக்குப்
பணியாற்றும் நலவாழ்வுப் பணியாளர்களுக்கு தன் நன்றியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். நலவாழ்வுப்
பணியாளர்களுக்கான திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இத்திங்கள்
காலை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியத் திருத்தந்தை, இவ்வாறு கூறினார். நோய்களையும்,
உடல் குறைபாடுகளையும், துன்பங்களையும் தாங்கிச் செல்லும் சகோதர, சகோதரிகள் மத்தியில்
நல வாழ்வுப் பணியாளர்கள் ஆற்றும் தொண்டை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டினார். துன்புறுவோரின்
துயர் துடைக்கும் பணிக்கெனத் தங்களை அர்ப்பணிக்க விரும்புவோருக்கு, இயேசுவின் பாடுகள்
சிறந்ததொரு பள்ளிக்கூடம் என்றும், அங்கு கற்றுக்கொள்ள கூடிய உண்மைகள் நிறைய உள்ளன என்றும்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.