2014-03-22 16:09:02

சிறாரைப் பாதுகாக்கும் புதிய திருப்பீடப் பணிக்குழு


மார்ச்,22,2014. சிறாரைப் பாதுகாக்கும் புதிய திருப்பீடப் பணிக்குழுவை இச்சனிக்கிழமையன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தகையதொரு குழு உருவாக்கப்படும் என்று 2013ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருந்தார்.
பிரான்சின் மருத்துவர் Catherine Bonnet , அயர்லாந்தின் திருமதி Marie Collins, பிரிட்டனின் பேராசிரியர் Sheila Hollins, அமெரிக்க ஐக்கிய நாட்டு கர்தினால் Sean Patrick O’Malley, OFM, இத்தாலியின் பேராசிரியர் Claudio Papale, போலந்தின் மேதகு Hanna Suchocka, அர்ஜென்டீனாவின் அருள்பணி Humberto Miguel Yañez, ஜெர்மனியின் அருள்பணி Hans Zollner சே.ச., ஆகியோர் இப்பணிக்குழுவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவில் மேலும் சில உறுப்பினர்கள் வருங்காலத்தில் இணைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்குழுவின் பணிகள் மற்றும் அதன் சட்ட விதிமுறைகளைத் தயார் செய்வது இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.