2014-03-22 16:08:53

இலங்கையின் புதிய திருப்பீடத் தூதர் பேராயர் Pierre Nguyên Van Tot


மார்ச்,22,2014. இலங்கையின் புதிய திருப்பீடத் தூதராக, பேராயர் Pierre Nguyên Van Tot அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பேராயர் Nguyên Van Tot அவர்கள், 1949ம் ஆண்டு வியட்நாமில் பிறந்தார். இவர் 1974ம் ஆண்டில் குருவாகவும், 2003ம் ஆண்டில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2008ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல் கோஸ்தா ரிக்கா நாட்டின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றிய பேராயர் Nguyên Van Tot அவர்கள், பெனின், டோகோ, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, சாட் ஆகிய ஆப்ரிக்க நாடுகளிலும் திருப்பீடத் தூதராகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், வியட்நாம் நாடாளுமன்றத் தலைவர் Nguyen Sinh Hung அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.