இந்தியா, சிங்கப்பூர் நீர் நிறுவனங்களுக்கு 2014ம் ஆண்டின் வாழ்வுக்கான தண்ணீர் விருது
மார்ச்,22,2014. தண்ணீர் வளங்களைச் சிறந்த விதமாகக் கையாள்கின்றவர்களுக்கு வழங்கப்படும்
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2014ம் ஆண்டின் வாழ்வுக்கான தண்ணீர் விருது, ஓர் இந்திய
மற்றும் ஒரு சிங்கப்பூர் நீர் நிர்வாக நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வெள்ளியன்று
ஐ.நா.வில் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது இவ்விருது அறிவிக்கப்பட்டது. இந்தியாவின்
டாட்டா தண்ணீர்க் கொள்கைத் திட்டத்தின், பன்னாட்டு நீர் நிர்வாக நிறுவனமும்(IWMI), சிங்கப்பூர்
“NE தண்ணீர்த் திட்ட அமைப்பும் இவ்விருதுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர்
“NE தண்ணீர்த் திட்ட அமைப்பு, சிங்கப்பூரின் அன்றாடத் தண்ணீர்த் தேவைகளில் 30 விழுக்காட்டுத்
தேவையை நிறைவு செய்கின்றது. ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதியன்று உலக தண்ணீர் தினம்
கடைப்பிடிக்கப்படுகின்றது.