2014-03-21 16:28:07

பாகிஸ்தானில் இந்துமதத் திருத்தலம் தாக்கப்பட்டதற்கு கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம்


மார்ச்,21,2014. பாகிஸ்தானில் இந்து சமயத்தவர் ஹோலி பண்டிகையைக் கொண்டாடியபோது அவர்களின் கோவில்கள் தாக்கப்பட்டதற்குத் தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு.
பாகிஸ்தானில் இடம்பெறும் சமய சகிப்பற்றதன்மையுடன்கூடிய நடவடிக்கைக்கு எதிராகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள, தலத்திருஅவையின் நீதி மற்றும் அமைதி பணிக்குழு, பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் வழிபாட்டுத்தலங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுள்ளது.
இம்மாதம் 15ம் தேதி சிந்து மாநிலத்தின் Larkanaவிலுள்ள இந்து மதத்தவரின் திருத்தலமான "Dharam Shala"வில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டபோது இசுலாம் தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்து மதத்தவர் தெய்வநிந்தனை செய்கின்றனர் என்று குறைகூறி இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் இசுலாம் தீவிரவாதிகள்

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.