நோயையும், இறப்பையும் இயேசுவின் பிரசன்னத்தில் எதிர்கொள்ள வேண்டும், திருத்தந்தை பிரான்சிஸ்
மார்ச்,21,2014. நோயும், இறப்பும் முட்டுக்கட்டைகள் அல்ல, அவை உண்மையானவை, அவற்றை இயேசுவின்
பிரசன்னத்தில் நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று
எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், பிரான்ஸ் நாட்டின் L’Arche” பிறரன்புக்
குழுவின் நிறுவனர் Jean Vanier அவர்களையும் இவ்வெள்ளியன்று சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 1964ம்
ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட L’Arche” பிறரன்புக் குழு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வருகின்றது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளி மாலை உரோம் புனித 7ம் கிரகரி ஆலயம் சென்று,
மாஃபியா குற்றக்கும்பலின் வன்முறைக்குப் பலியானவர்களின் 700 குடும்பத்தினரைச் சந்திக்கிறார்.