2014-03-19 15:50:53

திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளையின் அரியதொரு பரிசு - அவர் எழுதிய நாள் குறிப்பேடுகள்


மார்ச்,19,2014. ஏப்ரல் மாதம் இறுதி ஞாயிறான 27ம் தேதியன்று, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தையர் 23ம் ஜான், 2ம் ஜான்பால் ஆகியோர் புனிதர்களாக உயர்த்தப்படும் தருணத்தையொட்டி, திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளை அரியதொரு பரிசை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது.
1895ம் ஆண்டு Angelo Roncalli என்ற இளைஞர் எழுத ஆரம்பித்த நாள் குறிப்பேடுகள், 1963ம் ஆண்டில், 23ம் ஜான் என்ற பெயருடன் அவர் திருத்தந்தையாக மறைந்த காலம் வரையில் தொடர்ந்தன. இந்த நாள் குறிப்பேடுகளின் தொகுப்பு 10 நூல்களாக திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் எழுதிய நாள் குறிப்பேடுகளை பல்வேறு நாடுகளில் இயங்கும் வத்திக்கான் தூதரகங்களுக்கும், நூலகங்களுக்கும் பரிசாக அளிக்க திருத்தந்தை 23ம் ஜான் அறக்கட்டளை தீர்மானித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.