தியாகம், செபம், கருணை பற்றி பங்களாதேஷ் ஆயர்கள் விடுத்துள்ள
தவக்கால சுற்றுமடல்
மார்ச்,19,2014. தியாகம், செபம், கருணை ஆகிய மூன்று வழிகளில் நம்மையே புனிதமாக்கும் ஒரு
தருணம் தவக்காலம் என்று பங்களாதேஷ் ஆயர்கள் கூறியுள்ளனர். "அன்புப் பணியே நம்பிக்கையின்
கனி" என்ற தலைப்பில், பங்களாதேஷ் ஆயர்கள் விடுத்துள்ள தவக்கால சுற்றுமடலில், தியாகம்,
செபம், கருணை ஆகிய வழிகளில் புனிதத்தை நோக்கி செல்லமுடியும் என்று கூறியுள்ளனர். வறியோர்
மட்டில் அதிக அக்கறை காட்டும் செயல்பாடுகளில் குழந்தைகளையும், இளையோரையும் ஈடுபடுத்த,
தவக்காலத்தில், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நம்
உள்ளங்களில் இருக்கும் பகைமை உணர்வுகளைக் களைவதால் மட்டுமே சமுதாயத்தில் உள்ள பகைமையை
நம்மால் களையமுடியும் என்று ஆயர்கள் தவக்கால மடலில் வலியுறுத்தியுள்ளனர்.