2014-03-17 17:11:35

மறைந்துவாழும் சீனத் திருஅவையின் ஆயர் 96ம் வயதில் இறைபதம்


மார்ச்,17,2014. சீன அரசு சார்புடைய கத்தோலிக்க அவையில் இணைய மறுத்ததால் ஏறத்தாழ 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த சீனத் திருஅவை ஆயர் Joseph Fan Zhongliang அவர்கள், தன் 96ம் வயதில் இறைபதம் சேர்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக உடல்நலமற்றிருந்த ஆயர் Fan Zhongliang அவர்களின் அடக்கச் சடங்கு குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. திருத்தந்தைக்கு விசுவாசமாக இருந்ததற்காக 30 ஆண்டுகள் சிறையிலும், கட்டாயப் பணிமுகாமிலும் வைக்கப்பட்டிருந்த ஆயரின் அடக்கச் சடங்கை ஆடம்பரமின்றி நடத்தும்படி தல அதிகாரிகள் கட்டளையிட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Fan Zhongliang அவர்களின் மரணத்திற்குப்பின் தற்போது சீனாவின் Shangai பகுதியில் ஒரே ஓர் ஆயரே உள்ளார். Thaddeus Ma Daqin என்ற அந்த ஆயரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் AsiaNews








All the contents on this site are copyrighted ©.