இந்தியாவில் சாலைவிபத்துக்களில் தினமும் 166 பேர் பலி
மார்ச்,17,2014. இந்தியாவில் சாலைவிபத்தால் தினமும் 166 பேர் பலியாவதாக புள்ளிவிபரங்கள்
தெரிவிக்கின்றன. சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் வேகமாக செல்வதால் ஏற்படும்
விபத்துக்கள் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், மது அருந்திவிட்டு வேகமாகச்
செல்வதும் மற்றொரு காரணம் என்கிறது புள்ளிவிபரம்.