அமெரிக்க ஐக்கிய நாட்டின் காங்கிரஸ் அவையில் உரையாற்ற திருத்தந்தைக்கு அழைப்பு
மார்ச்,17,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒன்றிணைந்த
அவையில் உரையாற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இருஅவைகளின்
ஒன்றிணைந்த அவையில் உரையாற்ற திருத்தந்தை ஒருவருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும். திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பதவியை ஏற்று ஓராண்டு நிறைவுற்றுள்ளதையொட்டி
அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் அவைத்தலைவர் John Boehner, அவ்வழைப்பை
திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வமாக விடுத்துள்ளார். தன்னுடைய எடுத்துக்காட்டான வாழ்வு
மூலம் அனைத்துக் கண்டங்களின் மக்களின் இதயங்களைத் தட்டியெழுப்பிவருகிறார் திருத்தந்தை
பிரான்சிஸ் என பாராட்டியுள்ளார் Boehner.