திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனிதபூமித் திருப்பயணத்துக்கான தலைப்பு
மார்ச்,14,2014. “அவர்கள் ஒன்றாய் இருக்கும்படி” என்ற இறைவசனம், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் புனிதபூமித் திருப்பயணத்துக்கான தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது. வருகிற மே
24 முதல் 26 வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புனிதபூமியின் அம்மான், பெத்லகேம்,
எருசலேம் ஆகிய நகரங்களில் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இத்திருப்பயணத்தின்போது
எருசலேம் திருக்கல்லறையில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களையும் சந்திப்பார் திருத்தந்தை
பிரான்சிஸ்.