2014-03-11 14:29:11

திருத்தந்தை தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்வதற்கு செயோல் கர்தினால் நன்றி


மார்ச்,11,2014. வருகின்ற ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரியாவுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள தீர்மானிப்பதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Andrew Yeom Soo-jung.
தென் கொரியாவின் Daejeon மறைமாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 6வது ஆசிய இளையோர் மாநாட்டை முன்னிட்டு, வருகிற ஆகஸ்ட் 14 முதல் 18 வரை அந்நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பயணம், தென் கொரியாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஆசீர்வாதங்களையும் கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார் கர்தினால் Andrew Yeom Soo-jung.
கொரிய மறைசாட்சிகள் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்படும் நிகழ்வையும், இத்திருப்பயணத்தின்போது தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தென் கொரியத் தலைநகர் செயோல் கர்தினால் Yeom அவர்கள், கடந்த பிப்ரவரி 22ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.