2014-03-11 14:29:24

தவக்காலம், புதிய நம்பிக்கை மற்றும் துணிச்சலின் காலம், கர்தினால் Yeom


மார்ச்,11,2014. தவக்காலத்துக்கென செய்தி வெளியிட்டுள்ள செயோல் கர்தினால் Yeom அவர்கள், மனக்கலக்கம் மற்றும் துயரத்தின் காலமல்ல தவக்காலம், மாறாக, இக்காலம் மனித சமுதாயத்துக்கு, புதிய நம்பிக்கை மற்றும் துணிச்சலின் காலம் என்று கூறியுள்ளார்.
நாம் நமது பாவங்கள் குறித்துச் சிந்தித்து மனம் வருந்த வேண்டும் என்றும், மனம் வருந்துதல் என்பது ஆண்டவரை நோக்கிய பாதையைத் தேர்ந்துகொள்வதாகும் என்றும் கூறியுள்ளார் கர்தினால் Yeom.
நாம் ஆண்டவரோடு நல்லுறவைக் காத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் எனவும், இத்தவக்காலத்தில் பிறரன்பையும், தியாகத்தையும் செயல்களில் வெளிப்படுத்துவோம் எனவும் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார் செயோல் கர்தினால் Yeom.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.