2014-03-07 15:34:22

நமக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி கிறிஸ்துவிடமிருந்து வருகிறது, திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,07,2014. நமக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சி கிறிஸ்துவிடமிருந்து வருகிறது, நாம் கிறிஸ்துவோடு இருந்து அவரோடு நடந்து அவரின் சீடர்களாக வாழ்வதில் இம்மகிழ்ச்சி கிடைக்கின்றது என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், சீன அரசுத்தலைவர் Xi Jinping அவர்கள் பதவியேற்றபோது அவரை வாழ்த்தி அவருக்குத் தான் கடிதம் எழுதியதாகக் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Corriere della Sera என்ற இத்தாலிய நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்னர், தான் பதவியேற்ற நாளுக்கு மூன்று நாள்கள் கழித்து பதவியேற்ற சீன அரசுத்தலைவர் Xi Jinping அவர்களுக்கு தான் கடிதம் அனுப்பியதாகக் கூறினார் திருத்தந்தை.
சீன மக்கள் சிறந்த மக்கள், அவர்களைத் தான் அன்புகூருவதாகவும் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.