2014-03-07 15:34:53

2016ம் ஆண்டுக்குள் சிறார்ப் படைவீரர்களைத் தடைசெய்ய முயற்சி


மார்ச்,07,2014. உலகில் சிறார்ப் படைப்பிரிவுகளில் சேர்க்கப்படுவதை, 2016ம் ஆண்டுக்குள் முழுவதுமாகத் தடை செய்வதற்கு ஐ.நா. புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.
உலகெங்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும் இராணுவத்திலும், ஆயுதம் தாங்கிய எதிர்தரப்புக் குழுக்களிலும் போரிடுவதற்கும், சமைப்பதற்கும், சுமை தூக்குவதற்கும், செய்திகளை எடுத்துச்செல்வதற்கும் மற்றும் பிற வேலைகளுக்குமெனப் பயன்படுத்தப்படுகின்றனர்.
சிறார்–படைவீரர்கள் அல்ல என்ற தலைப்புடன் நியுயார்க்கில் புதிய முயற்சி ஒன்று இவ்வியாழனன்று தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மட்டும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறார் போர்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.