2014-03-04 15:36:17

நம் தவறுகளை ஏற்று அவற்றுக்காக மன்னிப்பும் கேட்போம், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,04,2014. வாழ்வில் நாம் அனைவரும் பல தவறுகளைச் செய்கிறோம். நம் தவறுகளை ஏற்பதற்குக் கற்றுக்கொள்வோம் மற்றும் அத்தவறுகளுக்காக மன்னிப்பும் கேட்போம் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், மார்ச் 5, திருநீற்றுப் புதனன்று மாலை 4.30 மணியளவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித ஆன்சல்ம் பசிலிக்காவில் பாவ மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றிய பின், அங்கிருந்து ஊர்வலமாக புனித சபினா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துவார்.
மார்ச் 9 ஞாயிறு முதல் வெள்ளி முடிய வத்திக்கானில் வாழும் கர்தினால்கள், ஆயர்கள், அருள்பணியாளர்கள் அனைவரோடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இவ்வாண்டுக்கான தியானம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.