2014-03-03 16:41:44

ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட கத்தோலிக்கக் கோவிலைக் கட்டியெழுப்ப புத்தமத பிறரன்பு அமைப்பு நிதியுதவி


மார்ச்,03,2014. கடந்த நவம்பர் மாதம், பிலிப்பின்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் புயலால் பாதிக்கப்பட்ட Tacloban நகர் கத்தோலிக்கக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப நிதியுதவி வழங்க புத்தமத பிறரன்பு அமைப்பு ஒன்று முன்வந்துள்ளது.
இனம், மதம், நாடு என்ற எவ்வித பாகுபாடுமின்றி உதவிகள் செய்யும் Tzu Chi என்ற புத்தமத அமைப்பு வழங்க முன்வந்துள்ள இவ்வுதவியை, பிலிப்பின்ஸ் தலத்திருஅவையும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அன்பு, கருணை, மற்றும் புரிந்துகொள்ளுதல் எனும் உணர்வுகளால் பிணையப்பட்டிருக்கும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து பணிபுரிவது, வரவேற்கப்பட வேண்டியது என்று, Santo Nino பங்குத் தளத்தைச் சேர்ந்த அருள் பணியாளர் Alex Opiniano அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.