2014-03-03 16:50:34

இலங்கையில், வேதியல் உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


மார்ச்,03,2014. இலங்கையில், சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ள வேதியல் உரங்கள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும் என்று அந்நாட்டின் மருத்துவர் கழகம் அரசிடம் விண்ணப்பித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக, இலங்கையில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு, வேதியல் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாடே முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் வழியே தற்போது தெரியவந்துள்ளதாக இலங்கை மருத்துவர் கழகம் கூறியுள்ளது.
1960ம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பாரம்பரிய உரங்களைக் கொண்ட வேளாண் முறையை ஊக்குவிக்க, அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் இலங்கை அரசை, தங்கள் அறிக்கையில் கேட்டுள்ளனர்.

ஆதாரம் : TamilWIn








All the contents on this site are copyrighted ©.