2014-03-01 15:53:42

காது கேளாமை பிரச்சனையைக் களைய அரசுகளுக்கு WHO அழைப்பு


மார்ச்,01,2014.உலகில் 36 கோடிப் பேர் காது கேளாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, இப்பிரச்சனையில் கவனம் செலுத்துமாறு அரசுகளுக்கு விண்ணப்பித்துள்ளது WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம்.
ஆசிய பசிபிக், தெற்கு ஆசியா, ஆப்ரிக்காவின் சகாராவையடுத்த பகுதி ஆகியவற்றில் காது கேளாமை பிரச்சனை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள WHO நிறுவனம், காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்ளும் மக்களில் பாதிப்பேருக்கு, இக்குறையை
நிவர்த்தி செய்ய முடியும் எனக் கூறியுள்ளது.
மார்ச் 3ம் தேதி காது பராமரிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள WHO நிறுவனம், காதுப் பிரச்சனை தொடர்பாக 72 நாடுகளுக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி 32 நாடுகளே செயல்பட்டுள்ளன எனவும் கூறியது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.