திருத்தந்தை பிரான்சிஸ் : திருநற்கருணை நமக்கு முக்கியமானது
பிப்.28,2014. திருநற்கருணை நமக்கு முக்கியமானது: கிறிஸ்து நம் வாழ்வில் நுழைய விரும்புகிறார்
மற்றும் தம் அருளால் நிறைக்கிறார் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இவ்வெள்ளியன்று எழுதியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், அர்ஜென்டினாவில் 2012ம் ஆண்டில் இரயில் விபத்தில்
இறந்தவர்களில் ஒருவரின் தாய்க்கு, தனது அனுதாபங்களைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். இந்த இரயில் விபத்து நடந்த இடத்தில் அண்மையில் இடம்பெற்ற
ஆண்டு நினைவு திருவழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இக்கடிதம் வாசிக்கப்பட்டது. 2012ம்
ஆண்டு பிப்ரவரி 22ம் தேதியன்று புவனோஸ் ஐரெஸ் இரயில் நிலையம் வந்த இரயில் மோதியதில்
பலர் இறந்தனர்.