2014-02-27 15:33:17

திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி/பிலிப்பீன்ஸுக்கு காரித்தாஸ் உதவி


பிப்.27,2014. யாருக்கு உதவி அதிகம் தேவையோ அவர்களைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்வது குடும்பங்களில் இயல்பாகவே காணப்படும். எனவே பலமற்ற நிலை கண்டு பயப்பட வேண்டாம் என்பது திருத்த்ந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கிய ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரோம் மறைமாவட்டம் 1,50,056 யூரோக்கள் உதவித்தொகையை அனுப்பியுள்ளது.
ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கென உரோம் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திரட்டப்பட்ட இந்த நிதியை, இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் வழியாக பிலிப்பீன்ஸ் மக்களுக்கு அனுப்பியுள்ளதாக, உரோம் காரித்தாஸ் இயக்குனர் அருள்பணியாளர் என்ரிக்கோ ஃபெரோச்சி அவர்கள் கூறினார்.
அகில உலக காரித்தாஸ் அமைப்பு, பிலிப்பீன்ஸ் நாட்டின் அனைத்து மறைமாவட்டங்களுடன் இணைந்து அந்நாட்டில் மேற்கொண்டுள்ள அனைத்துச் சீரமைப்புப் பணிகளுக்கும் அந்த நிதி உதவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.