2014-02-26 16:39:11

திருஅவையின் ஆரம்பக்காலம், வறுமையில் தோய்ந்திருந்தது - ஆசியக் கர்தினால் Orlando Quevedo


பிப்.26,2014. இயேசு கிறிஸ்துவின் இவ்வுலகப் பயணம், வறியோருடன் மேற்கொள்ளப்பட்டது என்றும், திருஅவையின் ஆரம்பக்காலம், வறுமையில் தோய்ந்திருந்தது என்றும் ஆசியக் கர்தினால் ஒருவர் கூறினார்.
அண்மையில் புதிதாகக் கர்தினால் பொறுப்பேற்ற 19 பேரில் ஒருவரான, பிலிப்பின்ஸ் நாட்டுப் பேராயர் Orlando Quevedo அவர்கள், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
கத்தோலிக்கரும், இஸ்லாமியரும் சம எண்ணிக்கையில் வாழும் Mindanao என்ற தீவில், Cotabato உயர் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிவரும் கர்தினால் Quevedo அவர்கள், கிறிஸ்தவ, மற்றும் இஸ்லாமிய மக்கள் ஒப்புரவுடன் வாழும் வழிகள் குறித்தும் பேசினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் பணிகள் குறித்து வெளியிட்டுவரும் பல கருத்துக்கள், சமுதாயத்தின் விளிம்பில் வாழும் மக்களுக்கு, ஆசியத் திருஅவை ஆற்றிவரும் பணிகளுக்குப் பெரும் உந்துதலாக உள்ளன என்றும் கர்தினால் Quevedo அவர்கள் கூறினார்.

ஆதாரம் : NCR








All the contents on this site are copyrighted ©.