பிப்.25,2014. இத்திங்களன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள வளர்ந்துவரும்
தீவு நாடுகளின் அனைத்துலக ஆண்டு, அந்நாடுகளில் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் சீர்கேட்டையும்,
சமூக-பொருளாதாரப் பின்னடைவையும் குறைக்க உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளனர்
ஐ.நா. அதிகாரிகள். உலகில் பெருமளவான சிறிய தீவு நாடுகள், வெப்பநிலை மாற்றத்தால் கடும்
பிரச்சனைகளை எதிர்நோக்கிவரும்வேளையில் இந்த அனைத்துலக ஆண்டு சிறப்பிக்கப்படுவது அந்நாடுகளின்
பிரச்சனைகள் குறைய உதவும் என்றும் ஐ.நா. அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நியுயார்க்கில்
வருகிற செப்டம்பர் 23ல் நடைபெறவுள்ள வெப்பநிலை மாற்றம் குறித்த அனைத்துலக மாநாட்டுக்கும்,
இந்த அனைத்துலக ஆண்டு ஆரம்ப நிகழ்வில் அழைப்பு விடுத்தார் பான் கி மூன். நாடுகளின்
குழு ஒன்றுக்கென ஓர் அனைத்துலக ஆண்டு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும். மாலத்தீவுகள்
கடலுக்குள் மூழ்கும் ஆபத்தை எதிர்நோக்குவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.