பிப்.24,2014. இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து
உரையாடினார் ஹெய்ட்டி நாட்டு அரசுத்தலைவர் மிசேல் ஜோசப் மார்டெல்லி. அரசுத்தலைவர்
மார்டெல்லி அவர்கள், திருத்தந்தையுடன் மேற்கொண்ட சந்திப்பிற்குப்பின் திருப்பீடச்செயலர்
கர்தினால் பியெத்ரோ பரோலின், வெளிநாட்டு உறவுகளுக்கான துறையின் செயலர் பேராயர் தொமினிக்
மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்து உரையாடினார். ஹெய்ட்டி நாட்டிற்கும் திருப்பீடத்திற்கும்
இடையே நிலவும் நல்லுறவு, நாட்டிற்கு திருஅவை ஆற்றிவரும் தொண்டு, குறிப்பாக கல்வி, நலம்
மற்றும் பிறரன்புத் துறைகளில் ஆற்றிவரும் பணி, நாட்டிற்குள் ஒப்புரவுக்கென உண்மையான பேச்சுவார்த்தைகள்
இடம்பெற வேண்டியதன் தேவை போன்றவை, ஹெய்ட்டி அரசுத்தலைவருக்கும் திருப்பீட அதிகாரிகளுக்கும்
இடையே நிகழ்ந்த கலந்துரையாடலில் முக்கிய இடம் வகித்தன.