திருத்தந்தையின் டுவிட்டர்: 'அன்னைமரி என்றும் நம்மருகே உள்ளார்'
பிப்.24,2014. 'நம் அன்னைமரி எப்போதும் நம்மருகே உள்ளார், குறிப்பாக, வாழ்வின் பிரச்சனைகளை
நாம் சுமையாக உணரும்போது' என தன் டுவிட்டர் பக்கத்தில் இத்திங்களன்று எழுதியுள்ளார் திருத்தந்தை
பிரான்சிஸ். துன்ப துயரங்கள் நம்மை அழுத்தும்போது, அன்னையை நாடுவோம், அவரின் அருகாமையை
உணர்வோம் என்பதை மையமாக வைத்து தன் கருத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.