காங்கோ குடியரசில் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத வன்முறைகள், ஆயர்கள்
பிப்.22,2014. எம் மக்கள் பீரங்கிக்கு இரையாகும் மக்கள் தொகுதி அல்ல என்பதை சப்தமாகவும்
தெளிவாகவும் சொல்வோம் என, காங்கோ சனநாயகக் குடியரசின் Katanga ஆயர்கள் கூறினர். Katanga
தென் மாநிலப் பகுதியில் Bakata-Katanga ஆயுதம் ஏந்திய குழுவினால் நடத்தப்படும் வன்முறைக்குக்
கண்டனம் தெரிவித்துள்ள ஆயர்கள், அப்பகுதியில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறினர். சூறையாடுதல்,
பாலியல் வன்செயல்கள், கொலைகள், சித்ரவதைகள், எரித்தல் போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதற்கு
Bakata-Katanga புரட்சிக்குழு இளையோரை நன்றாகப் பழக்கி வைத்திருக்கின்றது என்றும் ஆயர்கள்
தங்கள் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளனர். ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு மனிதாபிமான
உதவிகள் கிடைக்காததால் அவர்கள் மத்தியில் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகின்றது என்றும்
காங்கோ குடியரசின் Katanga ஆயர்கள் கூறினர்.