எவரெஸ்ட் முகாமில் பாதுகாப்பு குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானம்
பிப்.22,2014. உலகின் மிகப்பெரிய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை,
எவரெஸ்ட் அடிவார முகாமில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானித்துள்ளது. கடந்த
ஏப்ரலில் ஐரோப்பிய மலையேறிகளுக்கும், Sherpas குழுவுக்குமிடையே 7,470 மீட்டர் உயரத்தில்
சண்டை மூண்டதையொட்டி பாதுகாப்பு குழுவை அமர்த்துவதற்கு நேபாளம் தீர்மானித்துள்ளது.
1953ம் ஆண்டில் எட்மண்ட் ஹில்லரியும், டென்சிங் நார்கேயும் முதன்முதலில் எவரெஸ்டில் ஏறியதற்குப்
பின்னர் 3,000த்துக்கு அதிகமானோர் அம்மலை உச்சிக்குச் சென்றுள்ளனர். உலகின் மிகப்பெரிய
எவரெஸ்ட் 8,848 மீட்டர் உயரமுடையது.