திருத்தந்தை பிரான்சிஸ் Twitterசெய்தி : நீர்
அன்பு கூர்வதுபோல் நாங்களும் அன்பு கூரும் திறமையை வழங்கியருளும்
பிப்.20,2014. இயேசுவே ஆண்டவரே, நீர் அன்பு கூர்வதுபோல் நாங்களும் அன்பு கூரும் திறமையை
எங்களுக்கு வழங்கியருளும் என்ற Twitter செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று,
இத்தாலியம், பிரெஞ்ச், ஆங்கிலம், அரேபியம் உட்பட, ஒன்பது மொழிகளில் வெளியிட்டுள்ளார். மேலும்,
வருகிற மார்ச் மாதம் 28ம் தேதி, போலந்து நாட்டின் Krakow நகரில் அமைந்துள்ள மரியன்னை
பேராலயத்தின் 650ம் ஆண்டு நிறைவு விழாவில், திருத்தந்தையின் சார்பில், கர்தினால் Stanislaw
Rylko அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுநிலையினரின் பணிகளுக்கென
உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Rylko அவர்களை, வரலாற்று சிறப்பு
மிக்க இப்பேராலய விழாவில், தன் சார்பில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
நியமித்துள்ளார். விண்ணேற்பு மரியன்னைக்கென அர்ப்பணிக்கப்பட்ட இப்பேராலயம், 13ம் நூற்றாண்டில்
துவக்கப்பட்டு, 14ம் நூற்றாண்டின் மத்தியில் கட்டி முடிக்கப்பட்டது.