2014-02-17 15:59:38

வெனிசுவேலாவில் இடம்பெற்ற திருட்டு முயற்சியில், வயதான இரு சலேசிய துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்


பிப்.17,2014. வெனிசுவேலாவின் Valencia நகர், தொன் போஸ்கோ கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற திருட்டு முயற்சியில், இரு சலேசிய துறவிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
80 வயதான அருள் பணியாளர் Jesus Plaza அவர்களும், 84 வயதான, Luis Sanchez அவர்களும் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், 64 வயதான அருள் சகோதரர், David Marin என்பவர், கத்திக்குத்துக் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இவ்விரு சலேசிய சபைத் துறவிகளையும் கொலை செய்துள்ளவர்கள், 13 மற்றும், 15 வயதுடைய இரு சிறார்கள் என்றும், இத்துறவிகளின் அறைகளிலிருந்த கணனிகள், பணம், கைப்பேசி மற்றும் திருப்பலிக்கென பயன்படுத்தப்படும் பொருள்களையும் அவர்கள் திருடிச் சென்றுள்ளனர் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.