2014-02-17 15:53:46

திருத்தந்தை : 'துன்பங்களை அனுபவிக்கும் வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள்'


பிப்.17,2014. 'நோயுற்றிருப்போர் அனைவரும், குறிப்பாக அதிக துன்பங்களை அனுபவிக்கும் வேளைகளில் நம்பிக்கை இழக்காமல் செயல்படுங்கள். இயேசு கிறிஸ்து உங்கள் அருகில் உள்ளார்' என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த வாரம் லூர்து அன்னை திருவிழாவன்று திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக நோயாளர் தினத்தன்றும், நோயுற்றோருக்கான சிறப்பான செபங்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், இஞ்ஞாயிறு உரோமை பங்குதள சந்திப்பின்போதும் மாற்றுத்திறனாளிகளையும், நோயுற்றோரையும் தனியாகச் சந்தித்து உரைவழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.