திருத்தந்தை பிரான்சிஸ் : ஆப்ரிக்காவில் அமைதி நிலவச் செபிப்போம்
பிப்.15,2014. ஆப்ரிக்காவில், குறிப்பாக மத்திய ஆப்ரிக்கக் குடியரசிலும், தென்சூடானிலும்
அமைதி நிலவச் செபிப்போம்; உலகின் அமைதிக்காகச் செபிப்போம் என்று இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள
Twitter செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள், வருகிற 22ம் தேதி புதிய கர்தினால்களை உருவாக்கும் Consistory என்ற கர்தினால்கள்
அவை நிகழ்வை நடத்தவிருப்பதை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகத்தைக்
கொண்ட தபால்தலை ஒன்றை வெளியிடவுள்ளது இத்தாலிய அஞ்சல் துறை. இத்தாலிய அஞ்சல் துறை
வெளியிடவிருக்கும் 70 சென்ட் தபால்தலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதிய கர்தினாலின்
தலையில் சிவப்புத் தொப்பியை வைப்பதாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்
தபால்தலை வெளியீட்டு ஆவணத்தில், திருப்பீடச் செயலர் பேராயர் பியத்ரோ பரோலின் அவர்களின்
ஒரு கட்டுரையும் இடம்பெற்றிருக்கும் எனவும் இத்தாலிய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இத்தாலிய
அஞ்சல் துறை ஏற்கனவே ஒருதடவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முகம் கொண்ட தபால்தலை
ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.