2014-02-13 16:34:00

வானொலிப் பணியில் மூத்த நிறுவனமான வத்திக்கான் வானொலியில், உலக வானொலி நாள் கொண்டாட்டம்


உலகின் வானொலி நிலையங்கள் அனைத்திற்கும் முன்னோடியாக விளங்கும் வத்திக்கான் வானொலி, பிப்ரவரி 12ம் தேதி, நள்ளிரவு தாண்டி, பிப்ரவரி 13ம் தேதி துவங்கிய முதல் நொடியில், உலக வானொலி நாள் கொண்டாட்டத்தைத் துவக்கியது.
ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாச்சார நிறுவனமான UNESCO, ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 13ம் தேதியை, உலக வானொலி நாளாகக் கொண்டாடிவருகிறது.
வானொலி அலைகளின் சக்தியைக் கண்டுபிடித்த குலியெல்மொ மார்கோனி அவர்களால், திருத்தந்தை 11ம் பயஸ் அவர்களின் வேண்டுகோளின்படி, 1931ம் ஆண்டு, பிப்ரவரி 12ம் தேதி நிறுவப்பட்டு, கடந்த 83 ஆண்டுகளாக அர்ப்பண உணர்வுடன் பணியாற்றிவரும் மூத்த நிறுவனமான வத்திக்கான் வானொலி, உலக வானொலி நாளைக் கொண்டாடும் வகையில், இவ்வியாழன் புலர்ந்த முதல் மணித்துளிகளில், தன் கொண்டாட்டத்தை, இசையுடன் துவங்கியது.
2014ம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக வானொலி நாள், இத்துறையில் பணியாற்றும் பெண்களைச் சிறப்பிக்கும் நாளாகக் கொண்டாடப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.