2014-02-11 15:42:27

இலங்கையில் புகைப்பிடிப்போர் எண்ணிக்கையில் யாழ். மாவட்டம் முதலிடம்!


பிப்.11,2014. யாழ் மாவட்டம் புகைத்தலில் முதலாம் இடத்தில் இருப்பதாக அண்மையில் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக தெல்லிப்பளை நலத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இலங்கை தேசிய போதைப்பொருள் புகைத்தலுக்கு எதிரான அமைப்பினால் மேற் கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைத் தொடர்ந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முதலாம் இடத்தில் யாழ் மாவட்டமும், இரண்டாம் இடத்தில் கொழும்பு மாவட்டமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் 43 விழுக்காட்டினரும், கொழும்பு மாவட்டத்தில் 39 விழுக்காட்டினரும் புகைத்தலில் ஈடுபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை நலத்துறை அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : Tamil Win








All the contents on this site are copyrighted ©.