இந்திய ஆயர் பேரவையின் புதியத் தலைவர் - கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ்
பிப்.11,2014. CBCI எனும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் புதியத் தலைவராக சீரோ மலங்கரா
வழிபாட்டு முறையின் தலைவர் கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கேரள
கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும், இந்திய ஆயர் பேரவையின் துணைத்தலைவராகவும் பணியாற்றிவந்த
கர்தினால் கிளீமிஸ் அவர்கள், கேரளாவில் இடம்பெறும் இந்திய ஆயர் பேரவைக்கூட்டத்தில் இச்செவ்வாயன்று
தலைவராகத் தேர்வுச்செய்யப்பட்டார். கடந்த நான்காண்டுகளாக இந்திய ஆயர் பேரவையின் தலைவராக,
பம்பாய் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ் அவர்கள் செயல்பட்டு வந்தார். இந்திய
ஆயர்பேரவைக் கூட்டத்தைத் துவக்கிவைத்து உரையாற்றிய இந்தியாவிற்கான திருப்பீடத்தூதர்,
பேராயர் சல்வத்தோரே பென்னாக்கியோ அவர்கள், திருஅவைக்கு உள்ளேயும், கிறிஸ்தவ சபைகளுடனும்
பேச்சுவார்த்தைகளை ஊக்குவிக்குமாறு அழைப்பு விடுத்தார். இம்மாதம் 5ம் தேதி துவங்கிய
இந்திய ஆயர்பேரவையின் 8 நாள் கூட்டம், இப்புதனன்று நிறைவுக்கு வருகின்றது.