பிப்ரவரி 11 முதல் தமிழகத் தொலைக்காட்சிகளில் மாதா டி.வி.
பிப்.08,2014. கத்தோலிக்க விசுவாசத்தையும், பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து அவற்றை ஆழப்படுத்தும்
நோக்கத்தில், லூர்து அன்னமரியா விழாவான வருகிற செவ்வாயன்று, முதல் கத்தோலிக்கத் தமிழ்த்
தொலைக்காட்சியின் ஒளிபரப்புத் தொடங்குகிறது. மாதா டி.வி. என்ற பெயரில் செவ்வாய் இந்திய
நேரம் காலை 5 மணிக்குத் தொடங்கும் இந்தத் தொலைக்காட்சி உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்க்
கத்தோலிக்கரை இணைக்கும் பாலமாக அமைகின்றது. இளையோருக்கு, குழந்தைகளுக்கு என, தனித்தனி
நிகழ்ச்சிகளை வழங்கவிருப்பதுடன், அன்றையப் புனிதர், திருப்பாடல்கள், விழா நல்வாழ்த்துக்கள்,
இறையும் இயற்கையும், திருப்பலிகள், திருஅவை சட்டம், அருளடையாளங்கள், மரியன்னை பற்றிய
தெளிவுகள் என பல்வேறு தலைப்புகளில் நல்ல நல்ல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்குத் திட்டமிட்டுள்ளனர்
இதன் ஒருங்கிணைப்பாளர்கள். மாதா டி.வி.யில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை, என்ற இணையதள
முகவரியிலும் நேரடியாகக் காணலாம். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துக்களை,
சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்திற்கு அனுப்புமாறு நேயர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.