உலக அளவில் தட்டம்மை இறப்புக்கள் குறைந்துள்ளன, WHO நிறுவனம்
பிப்.08,2014. சிறாருக்குத் தட்டம்மை தடுப்பூசிகள் போடப்படுவதன்மூலம் உலக அளவில் தட்டம்மையினால்
ஏற்படும் இறப்புக்கள் குறைந்துள்ளன என WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. 2000மாம்
ஆண்டுக்கும் 2012ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் உலக அளவில் தட்டம்மையினால் ஏற்படும்
இறப்புக்கள் 78 விழுக்காடு குறைந்துள்ளன, ஆயினும், இதே காலக்கட்டத்தில் ஏறக்குறைய 1 கோடியே
38 இலட்சம் இறப்புக்களைத் தடுத்திருக்க முடியும் என உலக நலவாழ்வு நிறுவனம் மேலும் கூறியுள்ளது. தட்டம்மையினால்
ஏற்படும் இறப்புக்கள் 2000மாம் ஆண்டில் 5,62,000க்கு அதிகமாக இருந்தன, ஆனால் இவ்வெண்ணிக்கை,
2012ம் ஆண்டில் 1,22,000மாகக் குறைந்தது என WHO நிறுவனம் மேலும் கூறியுள்ளது. தற்போது
உலகின் 84 விழுக்காட்டுக் குழந்தைகளுக்கு, அவை ஒரு வயதை எட்டுவதற்கு முன்னமே முதல்கட்ட
தட்டம்மை தடுப்பூசிகள் போடப்படுகின்றன. உலகின் 145 நாடுகள் இரண்டாம்கட்ட தட்டம்மை தடுப்பூசிகள்
போடவும் துவங்கியுள்ளன.